சென்னையைச் சேர்ந்த ஆதிநாராயண சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றும், அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றியபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஜே.கே.ரித்தீஷ் 3 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதனை வங்கி மூலமாக அளித்ததாகவும், ஆனால் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.