வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் மோசடி!

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (22:19 IST)
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இன்ஜினியர் ஒருவரிடம் இருந்து  பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கால் செய்த ஒருவர் அவர் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவ்ரது வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். பின்னர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்