பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சனி, 25 ஏப்ரல் 2015 (17:52 IST)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
 
டெல்லியில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கூட்டம் முடிந்ததும், மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
 
அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கர்நாடகா திட்டங்கள் எதையும் நிறைவேற்ற தடைவிதிக்க வேண்டும் எனவும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டும் விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பிரதமர் மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்