மேகதாது அணைத் திட்டத்தை கைவிடுங்கள்! – எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஞாயிறு, 4 ஜூலை 2021 (16:26 IST)
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற போராடி வரும் நிலையில் புதிய அணையால் தண்ணீர் பங்கீட்டில் மேலும் குளறுபடிகள் எழும் என்ற கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக விவசாயத்திற்கு காவிரி நீர் இன்றியமையாதது என்றும், எனவே மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்திய கடிதத்தை எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்