பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுமா? – முதல்வர் விளக்கம்!

ஞாயிறு, 4 ஜூலை 2021 (13:02 IST)
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழல் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பிற்கு முன் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ வல்லுனர்கள் இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என கூறியுள்ளார். எனவே மத்திய அரசின் குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிவிப்பை பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்