தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

வியாழன், 10 மார்ச் 2022 (17:13 IST)
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு   கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை  உடனடியாக விடுவிக்க    தாங்கள் நேரடியாகத் தலையிட்டு   நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கேரளாவைச் சேர்ந்த மூன்று  மீனவர்களுடன் இந்தோனேஷிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கூறி இந்தோனேஷிய வான் மற்றும் கடல் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்