நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரிக்கை! – முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

திங்கள், 14 மார்ச் 2022 (13:41 IST)
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு தரப்பு மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பே முக்கியம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்