மூன்றாவது கட்ட "நமக்கு நாமே" பயணத்தை இன்று நிறைவு செய்கிறேன். கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்கிய எனது பயணம் 31 மாவட்டங்களில் உள்ள 212 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்திருக்கிறது. நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அன்புடன் வரவேற்று, என் மீது பாசமழை பொழிந்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், அதிமுக ஆட்சியின் அவலங்களை விவரிக்கும் நான்கு லட்சம் மனுக்களை மக்களிடமிருந்து நான் பெற்றுள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகம் புதிய விடியலை அளிக்கும் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளித்திருக்கிறேன்.