மு.க.ஸ்டாலினின் மூன்றாவது கட்ட பயணம் ஓவர்... ஓவர்...

சனி, 7 நவம்பர் 2015 (01:03 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின், நமக்கு நாமே விடியல் மீட்புப்பயணம் நிறைவு பெற்றது.
 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மூன்றாவது கட்ட "நமக்கு நாமே" பயணத்தை இன்று நிறைவு செய்கிறேன். கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்கிய எனது பயணம் 31 மாவட்டங்களில் உள்ள 212 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்திருக்கிறது. நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அன்புடன் வரவேற்று, என் மீது பாசமழை பொழிந்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
 
மேலும், அதிமுக ஆட்சியின் அவலங்களை விவரிக்கும் நான்கு லட்சம் மனுக்களை மக்களிடமிருந்து நான் பெற்றுள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகம் புதிய விடியலை அளிக்கும் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளித்திருக்கிறேன்.
 
சென்னை மாநகர மக்களை சந்திக்க மேற்கொள்ளும் எனது நான்காவது கட்ட "நமக்கு நாமே" பயணத்தை நவம்பர் 17 ஆம் தேதி துவங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்