கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல் போன் சார்ஜர் போட்ட நிலையில், தனுஷ் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, திடீரென செல்போன் வெடித்து, சிறுவனின் வலது கை மற்றும் 2 கண்களில் படுகாயம் ஏற்பட்டது.
சிறுவனுக்கு சிகிச்சைக்காக முதலில் செங்கல்பட்டு மருத்துவமனைக்கும், பின்பு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, தனுஷ் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்த சிறுவனனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலன் விசாரித்து ஆறுதல் கூறினார்.