இதை முதல்லயே செஞ்சிருக்கலாமே! – திமுக ஆர்ப்பாட்டம் ரத்து! ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய், 9 ஜூன் 2020 (14:43 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானதை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் முதல் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 தேர்வு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இதற்கான இறுதி விசாரணை நாளை மறுநாள் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார்.

இதனால் பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பால் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ” பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்