அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு 3 வருட சிறைத்தண்டனை. ஆனால்....

திங்கள், 8 மே 2017 (22:36 IST)
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை, அவரது மனைவியிடம் விசாரணை, விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் தற்கொலை என விஜயபாஸ்கரை ஒட்டியே அடிக்கடி தலைப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் என்பவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



 


கோவையில் வணிக வளாகம் வாங்கியது தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டதாக இன்று கோவை நீதிபதி விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.

ஆனால் அதே நேரத்தில் தீர்ப்பு வெளிவந்தவுடன் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் கோவை நீதிமன்றத்தில் ரூ.20,000 அபராதத் தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்