பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு! – முதன்முறையாக ஆன்லைனில்..!

புதன், 2 பிப்ரவரி 2022 (08:49 IST)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் இன்று ஆன்லைன் மூலமாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் தமிழக மருத்துவ கல்லூரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு உள்ளிட்டவை நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

முதன்முறையாக இந்த கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. பிப்ரவரி 5ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்