நெல்லையில், முகமூடி திருடர்கள் அட்டூழியம்

திங்கள், 5 அக்டோபர் 2015 (03:48 IST)
நெல்லையில், வாசலில் கோலம் போடும் பெண் ஒருவருவரின் கழுத்தில் கிடந்த 8 பவுன் ஜெயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
 

 
நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் மிக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி அன்ன நிலா. இவர் அதிகாலை நேரத்தில் தனது வீட்டின் முன்பு தண்ணி தெளித்து, சுத்தம் செய்து, கோலம் போட்டார்.
 
அப்போது, அந்த வழியே ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் முகமுடி அணிந்து கொண்டு வந்துள்ளார்.
 
அந்த மர்ம நபர்கள் அன்ன நிலா கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதனால், அன்ன நிலா சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் அந்த மர் மனிதர்கள் மறைந்து போனார்கள்.
 
இது குறித்து, பணகுடி காவல் நிலையத்தில், அன்ன நிலா புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து முகமுடி கொள்ளை நடப்பதால் பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்