மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:41 IST)
உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை  முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி உள்ளூர் விடுமுறை என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை ஆகும். இந்த நிலையில் அய்யா வைகுண்ட சாமி அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை என்பதால் அந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 11ஆம் தேதி வேலை நாள் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்