கட்சியை பதிய டைம் இல்ல.. சுயேட்சையாக மன்சூர் அலிகான்!

வியாழன், 18 மார்ச் 2021 (12:36 IST)
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் தற்போது சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

ஆனால் கட்சியை பதிவு செய்ய கால அவகாசம் இல்லாததால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்