இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பலர் நலமடைந்திருப்பதாகவும், அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுள் 3 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர்களுள் ஒருவருக்கு மட்டுமே கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.