ஆண் வங்கப்புலி விஜயன் உயிரிழப்பு

Sinoj

புதன், 21 பிப்ரவரி 2024 (21:15 IST)
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 
செங்கல்பட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.
 
இரத்த மதிப்பீடு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
 
எனவே பூங்கா வன உயிரின மருத்துவக் குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 21 வயதான விஜயன் என்ற ஆண் வங்கப்புலி வயது மூப்பின் காரணமாக  உயிரிழந்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்