சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெள்ளி, 30 ஜூன் 2023 (17:42 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தற்போது சிபிஐ மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  8 முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்த சிபிஐ 2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர், விசாரித்த சிபிசிஐடி  அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறியதோடு,  2 முதல் 3 மாதம் அவகாசம் கோரப்பட்டது.
 
இந்த நிலையில்  இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்