கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரசாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் விதிகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.