காணாமல் போனதாக கூறப்பட்ட மாதவன் எங்கே இருக்கின்றார் தெரியுமா?

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:39 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது கணவர் மாதவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என்று நான்கு நாட்களுக்கு முன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் காணாமல் போகவில்லை என்றும் பத்திரமாக பாண்டிச்சேரியில் இருப்பதாகவும் மாதவன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்
 
“நான் பாண்டிச்சேரிக்கு சென்று 3 வருடமாகிறது என்றும் நான் 4 நாட்களாக காணாமல் போனதாக ஜெ.தீபா கூறியது ஏன் என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் மாதவன் கூறியுள்ளார். 
 
தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த பிரபாகரன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் தான் மாதவன் கூறியதால் தான் இவ்வாறு நடித்ததாக கூறினார். இதனையடுத்து மாதவனிடம் விசாரணை செய்ய போலீசார் அவரை தேடி வந்தனர்.
 
இந்த நிலையில்  சென்னை போலீஸ் கமிஷனர் முன்பு ஆஜராகிய மாதவன், 'எங்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீசார் விசாரணைக்கு அழைத்தால் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மாம்பலம் காவல் நிலையத்தில் பிரபாகரன் சரணடைந்த போது, நான் குழப்ப நிலையில் இருந்தேன். அதனால் நான் யாரையும் சந்திக்கவில்லை. போலீசாரின் விசாரணை குறித்து கேள்விப்பட்டு நான் போலீஸ் கமிஷனரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். எனக்கு இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை 'என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்