ஊரடங்கு நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்? முழு விபரங்கள் இதோ:

வெள்ளி, 25 ஜூன் 2021 (19:43 IST)
தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த புதிய ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார் அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வழிகாட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது
 
தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட  23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சாலையோர உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி!
 
துணிக் கடைகள் நகைக் கடைகள் காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
 
வணிக வளாகங்கள் ஷாப்பிங் மால்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் காலை 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி! 
 
தமிழகத்தில் ஜூலை 5 வரையிலான தளர்வுகளில் சினிமா தியேட்டர் திறக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை
 
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்கள் தான் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்