கோவை, வடவள்ளி சாலையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதிலும் 14 இணைப்புக் கல்லூரிகளும், 13க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இதில், சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி அணுகிய உடுமலைப்பேட்டை வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த மா.செந்தில்குமார் என்பவர், தான் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை தகவல் பணியாளர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான பணி நியமன ஆணையைக் காட்டியுள்ளார்.