காதலர் தினத்திற்கு ஆப்பு வைத்த பெண்கள் கல்லூரி: மாணவிகளிடையே பரபரப்பு

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (12:04 IST)
காதலர் தினத்திற்கு ஆப்பு வைத்த பெண்கள் கல்லூரி
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருவதால் காதலர்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில்  கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று கல்லூரி தினம் என்பதால் கல்லூரி முடிந்ததும் மாணவிகள் காதலனுடன் செல்ல வாய்ப்புள்ளது என்பதால் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பெற்றோர்களுக்கு ஒரு அலர்ட் மெசேஜை தட்டிவிட்டுள்ளது.
 
இதன்படி இன்று கல்லூரி நேரம் முடியும் முன்னரே தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர்கள் தாராளமாக நேரில் வந்து அழைத்துச் செல்லலாம் என்றும் கல்லூரி கல்லூரி நேரம் ஒரு மணிக்கு முடிவடைந்தாலும் அதற்கு முன்னரே அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்ல அனுமதி உண்டு என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளது.
 
காதலர் தினத்திற்கு ஆப்பு வைத்த பெண்கள் கல்லூரி
கல்லூரி முடிந்ததும் மாணவிகள் தங்கள் காதலர்களுடன் செல்ல வாய்ப்பு இருப்பது என்பதால் இந்த மெசேஜை அந்த கல்லூரி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெசேஜ் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட திட்டமிட்டிருந்த மாணவிகள் தங்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பை நினைத்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்