நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக நேற்று காலை செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று நேற்று மாலை செய்தி வெளியானது.
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குஷ்பு “ரம்பா தனது அழகான இரு பெண் குழந்தைகள் மற்றும் அன்பான கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். எனவே அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் மனது அமைதியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.