இளங்கோவனே அடுத்த முதலமைச்சர் : தெறிக்கவிட்ட குஷ்பு

சனி, 9 ஜனவரி 2016 (15:35 IST)
காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே அடுத்த முதலமைச்சர் என்று பேசியுள்ளார்.


 

 
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் தயாராகி வருகிற நிலையில், காங்கிரஸ் திமுக பக்கம்தான் செல்லும் என்று தெரிகிறது. ஏனேனில், திமுக கலைஞர் கருணாநிதி நேரிடையாக காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் நன்றி தெரிவித்திருந்தார். 
 
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று எந்த கட்சியும் இதுவரை அறிவிக்காத நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் சார்பாக நடந்த ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு “நாங்க காங்கிரஸ்... தெறிக்க விடமாட்டோம்...” என்றார். உடனே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்பரித்தனர். 
 
அதன்பின் பேசிய அவர் “வருகிற 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்கிரசின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. ஒருவேளை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இளங்கோவன்தான்” என்று  கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்