இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் நாள் நெல் கொள்முதல் விலை அறிவிக்கப் படுவதும், அடுத்த நாள் முதல் குறுவைப்பருவ நெல் கொள்முதல் தொடங்குவதும் வழக்கம் ஆகும். நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை கடந்த 30ஆம் தேதி அரசு அறிவித்தது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில், குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகக் கூறப்படுகிறது.