இதில், கூடங்குளத்தில் 3, 4ஆம் அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். மேலும் இந்தியாவின் ஓ.என்.சி நிறுவனம் ரஷ்யவின் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ரூ.36,747 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த கட்டுமானப்பணிகள் 2022–ம் ஆண்டு நிறைவடைந்து, மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா - ரஷ்யா இடையே பொருளாதாரம், பாதுகாப்பு துறையில் வருங்காலங்களில் ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்தார். மேலும், தற்போது செயல்படும் 2 அணு உலைகள் உட்பட மொத்தம் 8 அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படும் என மோடி தெரிவித்தார்.