ஆர்.கே.நகரை காங்கிரசுக்கு கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு தொகுதியை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக தரப்பு இளங்கோவனிடம் பேசி, இளாங்கோவன் குஷ்பு மற்றும் காங்கிரஸ் தலைமையிடமும் பேசிவிட்டதாக பேசப்படுகிறது.
ஜெயலலிதாவை எதிர்த்து ஜெயிக்க முடியாவிட்டாலும், அவருக்கு சென்னை மழை வெள்ளத்தை வைத்து நெருக்கடி கொடுக்கவே இந்த திட்டம் எனவும் பேசப்படுகிறது. குஷ்பு தரப்பிலும் இதற்கு கிரீன் சிக்னல் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குஷ்புவின் இலக்கு தேசிய அரசியல் தான் என்பதால் இதில் தோற்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.