ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஒரு ஓட்டு: கவிஞர் சல்மா கிண்டல்

புதன், 13 அக்டோபர் 2021 (08:29 IST)
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஒரு ஓட்டு: கவிஞர் சல்மா கிண்டல்
பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றதை அடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஒரு ஓட்டு என்று கவிஞர் சல்மா கிண்டல் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 
 
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தெரிந்ததே. அனைத்து மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் செலவு மிச்சமாகும் என்றும் மத்திய அரசு கூறி வருகிறது
 
ஆனால் அதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கோவையை சேர்ந்த பாஜக வேட்பாளர் ஒருவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு பெற்றதை அடுத்து கவிஞர் சல்மா கிண்டல் செய்துள்ளார். அதில் அவர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஒரு ஓட்டு பெற்ற பாஜகவிற்கு வாழ்த்துக்கள் என்று அவர் கூறியிருப்பது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்