இதனையடுத்து, அவரது வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு அரசியல் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, கேரள செண்டை மேளம் வாசிக்கப்பட்டது. இது குறித்து, தமிழர் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், செண்டை மேளம் என்பது கேரளாவில் புகழ் பெற்றது ஆகும். பழங்காலங்களில், தமிழகத்தில் கேரள செண்டை மேளம் வாசிக்கும் பழக்கம் இல்லை. அது தமிழ் மரபும் அல்ல. தவில் மட்டுமே தமிழன் இசை அடையாளம்.
ஆனாலும், தற்போது தமிழகத்தில் கேரள செண்டை மேளம் பொது மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவருகிறது. மூச்சுக்கு 300 தடவை தமிழ்தமிழ் என கூறும் கருணாநிதி தனது பிறந்த நாளுக்கு தமிழ் முறைப்படி இல்லாமல் கேரள முறைப்படி இசையை நேசிப்பது புரியவில்லை என்கின்றனர்.