கனிமொழி தடுத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் செய்வதால் பரபரப்பு!

ஞாயிறு, 10 ஜனவரி 2021 (10:08 IST)
கனிமொழி தடுத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம்
தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திமுக தரப்பில் இன்று பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த உள்ளது
 
இந்த போராட்டம் திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி திமுக நடத்தும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள சென்ற கனிமொழி எம்பி போலீஸார்கலால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது 
 
ஈச்சனாரி என்ற இடத்தில் கனிமொழியை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி செய்ததை இதனை கண்டித்து கனிமொழி தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தன்னை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கனிமொழி நடத்தி வரும் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்