திருமணத்துக்கு முன் மணமக்கள் மருத்துவப் பரிசோதனை: கி.வீரமணி வரவேற்பு

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (12:05 IST)
திருமணத்துக்கு முன் மணமக்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், வழக்கு ஒன்றில் திருமணத்துக்கு முன்பு மணமக்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.
 
மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இதை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய முன்வர வேண்டும்.
 
இந்தச் சட்டத் திருத்தம் கோரி, சமூக நல ஆர்வலர்களும் சமூக சீர்திருத்த அமைப்புகளும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்