முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 52-வது நினைவு தினத்தையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு குமரிஅனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.எல்.ஏ., ஒருவர் பதவி விலகி 10 நாட்களிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என குறிப்பிட்டார்.