உடனடியாக அந்த பெண்களை பின் தொடர்ந்து சென்ற பாபுலால் ரோந்து பணியில் இருந்த ஆர்.கே.நகர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். காவல் துறையினர் அந்த பெண்களை மடக்கி பிடித்து பெண் காவலாளி உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில், அவர்களிடம் 16 மூக்குத்திகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சுதா(35), லோகநாயகி(44) என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.