பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை எனவே அவரை நீக்கிவிட்டு, அரசு தரப்பில் வாதாட வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 34வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.