இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அதிரடி திருப்பமாக கொலையாளியை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சி புரத்தில் காவல்துறை பிடித்தது. அப்போது குற்றவாளி தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக காவல்துறை சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.