ஜெயலலிதா கண் சிமிட்டாமல் பார்த்த அமைச்சர் யார் தெரியுமா?

வியாழன், 1 செப்டம்பர் 2016 (21:02 IST)
சட்டப்பேரவையில், முதல்வர் ஜெயலலிதாவையே கலங்க வைத்துவிட்டார், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி.


 


அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது, ”நான் காலனியில் பிறந்தேன், காலணி கூட இல்லாமல் இருந்தேன். ஆனால் என்னை அம்மா இன்று இரண்டு காவலர்கள் போட்டு பாதுகாக்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.” என்று முடிக்கும் முன்பே அவருக்கு அழுகை வந்துவிட்டது. அப்போது அவரை, முதல்வர் ஜெயலலிதா கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


 


தொடர்ந்து பேசிய அமைச்சர், “என்னை ஆதி-திராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக்கி அந்த துறையை ஜோதி-நலத்துறையாக மாற்றிவிட்டார்” என்றார். அவர் பேசி முடித்தவுடன், கை தட்டல்கள் நீண்ட நேரம் அரங்கை நிரப்பியது.

வெப்துனியாவைப் படிக்கவும்