அதன் காரணமாக அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வெகு நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதாகவும், அப்படி உட்காரும் போது ‘ டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல், அவர் இயல்பாகவே சுவாசிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அவர் விரும்பும் உணவுகள், போயஸ் கார்டனில் சமைக்கப்பட்டு அவருக்கு வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.