இந்த வழக்கில் பவானி சிங் வாதத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, க.அன்பழகனும், கர்நாடக அரசும் தங்களது எழுத்துப்பூர்வு வாதத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் வழிகாட்டி இருந்தது.
அதற்கு முழுமையாக விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் என முழுமையான தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துப் பூர்வ வாதம் அமைந்திருப்பதாக வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது.