தனித்து போட்டியிடுங்க.. ஆனா கட்சிய பத்தி பேசாதீங்க! – பாமகவுக்கு ஜெயக்குமார் கண்டனம்!

புதன், 15 செப்டம்பர் 2021 (11:07 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, அதிமுக குறித்து பேசியதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ”யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் பாமக தனித்து போட்டியிட விரும்பினால் அவர்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதிமுக குறித்தோ, கட்சி உள்விவகாரங்கள் குறித்தோ பேச உரிமை கிடையாது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்