ஜல்லிக்கட்டு போட்டியை வலியறுத்தி ரயில் மறியல் போராட்டம்

புதன், 13 ஜனவரி 2016 (22:49 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெற மத்திய அரசை  வலியுறுத்தி, சமக சார்பில் சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருந்த தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக, ஏற்பட்டுள்ள தடையை அகற்றிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் ஜனவரி 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்