தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்

வியாழன், 7 ஜூலை 2016 (14:20 IST)
தமிழகம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையில் சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென 8 மணிக்கு மேல் மழை பெய்தது. இது சென்னை வாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த மழை 21.மில்லி மீட்டராக பதிவானது.
 
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்