பழைய ரோட்டை சுரண்டிட்டுதான் புது ரோடு போடணும்! – தலைமை செயலாளர் இறையண்பு உத்தரவு!

வியாழன், 13 மே 2021 (10:28 IST)
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை அகற்ற வேண்டும் என புதிய தமிழக தலைமை செயலாளர் வெ.இறையண்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவியேற்றுள்ள வெ.இறையன்பு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஊரக பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலை மீதே மீண்டும் சாலை அமைப்பதால் சாலை உயரம் அதிகரிப்பதால் மழை காலங்களில் மழை வெள்ளம் அருகில் உள்ள குடியுருப்புகளில் புகுந்து விடும் சூழல் உள்ளது. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர் இனி ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்