அன்புமணி மீதான கிரிமினல் வழக்குக்கு இடைக்கால தடை - நீதிமன்றம் உத்தரவு

திங்கள், 30 நவம்பர் 2015 (21:31 IST)
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த 2013ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வரும் 11ம் தேதி நேரில் ஆஜராக அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இதை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, அன்புமணி ராமதாஸ் மீதான கிரிமினல் வழக்குக்கு இடைக்கால தடைவிதித்தும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்