மீண்டும் 16 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Mahendran

வியாழன், 24 அக்டோபர் 2024 (15:13 IST)
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நிலையில், தற்போது மீண்டும் 16 மீனவர்களை கைது செய்ததை அடுத்து, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவில் மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தனர்.
 
இந்த நிலையில், கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இரண்டு இயந்திர படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.
 
இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கைது நடவடிக்கைகள், நம் நாட்டின் மீனவர்கள் குடும்பத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 128 மீனவர்கள் மற்றும் 199 மீன்பிடி படகுகளை விரைந்து விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்