நான் சொன்ன கருத்தை திரும்ப பெற மாட்டேன்! – இளையராஜா உறுதி!

ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (16:14 IST)
பிரதமர் குறித்து இளையராஜா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன் கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தன்னுடைய கருத்தை தான் திரும்ப பெறப்போவதில்லை என்றும், தன்னுடைய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்