தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தேர்தல் பரப்புரைக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில் பேசிய விஜயகாந்த் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நான் பேச ஆரம்பித்தால் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் தாங்கமாட்டார்கள் என எச்சரித்தார். மேலும் மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி கிரானைட் வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை விடுதலை செய்ததை விமர்சித்தார். அதில் உள்நோக்கம் உள்ளது என குற்றம்ச்சாட்டினார்.