நான் நிரபராதி என்று ஸ்டாலின், உதயநிதி சொல்லுங்கள்.. தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்..!

Mahendran

திங்கள், 22 ஜூலை 2024 (17:50 IST)
பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை கூட இல்லை, என்றாவது ஒருநாள் நான் நிரபராதி என்று மேடையில் ஸ்டாலின் ஐயா, உதயநிதி பிரதர் சொல்லுங்கள் என குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகார் கொடுத்து உள்ளார். எனது கணவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இது குறித்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக குஜராத் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதுரையை சேர்ந்த மைதிலி ராஜேந்திரன் என்பவர் 14 வயது மகன் மர்ம கும்பலால் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட நிலையில், இந்த கடத்தலை நிகழ்த்தியது மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்