செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன பாடப்பிரிவுகளுக்கான தேவை தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இவை தொழில்நுட்பத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால், தெலங்கானா பொறியியல் கல்லூரிகள் உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்று முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி விரும்புகிறார்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரு புதிய அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கல்லூரிகள் மாறிவரும் சந்தை தேவைகளுக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். இந்தச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, மேம்பட்ட வசதிகள், திறமையான ஆசிரியர்கள், நவீன ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி கட்டணங்களை இறுதி செய்யும்போது, கல்லூரியின் வசதிகள், ஆய்வகங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கற்பிக்கும், கற்பிக்காத ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளை முழுமையாக கணக்கில் எடுத்து கொண்டுதான் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.