முதல்வர் தீபாவளியை மக்களுடன் கொண்டாட வேண்டும் : அப்பல்லோவில் குஷ்பு

திங்கள், 24 அக்டோபர் 2016 (14:28 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இன்று அப்பல்லோ வந்தார். 


 

 
அதன்பின், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்தார். சுமார் 30 நிமிடங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேசிய அவர் “முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்கள் என்னிடம் கூறினார்கள். அவர் பூரண குணமடைந்து, விரைவில் வீடு திரும்பி, வரும் தீபாவளியை மக்களுடன் கொண்டாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்